Translate

Saturday, 25 August 2012

டெட் தேர்ச்சி பெறாதவர்கள் அக்டோபர் 3ல் எழுதலாம்

சென்னை: ஆகஸ்ட் 25ம் தேதி வெளியிடப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவில், 1% பேர் கூட தேர்ச்சி பெறவில்லை. எனவே, தோல்வியடைந்தவர்களுக்கான மறுதேர்வு அக்டோபர் 3ம் தேதி நடைபெறவுள்ளது.
மொத்தம் 676773 பேர் பங்கேற்றதில், 2448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். எனவே, போதுமான ஆசிரியர்களை நியமிப்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதனால் தோல்வியடைந்த மாணவர்களுக்கான மறுதேர்வு, அக்டோபர் 3ம் தேதி நடைபெறவுள்ளது. ஜுலை 12ம் தேதி தேர்வெழுதி தோல்வியடைந்தவர்கள் மட்டுமே இந்த மறுதேர்வை எழுத முடியும். அதேசமயம், இதற்காக மீண்டும் விண்ணப்பிக்க தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மறுதேர்வில், 30 நிமிட நேரம் கூடுதலாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விரிவான விபரங்களை அறிய www.trb.tn.nic.in என்ற இணையதளம் செல்க.

No comments:

Post a Comment